கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து – ஆபத்தான நிலையில் பலர்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply