20 இன்ஜின்களை  இலங்கைக்கு வழங்க உள்ள இந்தியா!

ஏறக்குறைய 20 ரயில் என்ஜின்களை இந்தியா இலங்கைக்கு வழங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட என்ஜின்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை குறித்த  ரயில் என்ஜின்கள் இலங்கையில் இயங்குவதற்கு ஏற்றதா என்பதை கண்டறியும் வகையில், தொழில்நுட்பக் குழுவொன்றை எதிர்வரும் காலங்களில் இந்தியாவுக்கு அனுப்ப ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பின்னர், இந்த இன்ஜின்கள் நாட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply