போலந்துயுவதி இலங்கையில் மரணம்!

தங்காலைக் கடலில் தனது  நண்பனுடன் கடலில் குளிக்கச் சென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் நேற்று மாலை  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இரு போலந்து பிரஜைகளும் தங்காலை கடலில் குளிக்க சென்ற வேளை பலத்த கடல் அலைகளால்  இருவரும் அடித்துச் செல்லப்பட்டதாகவும்  பின்னர் அவர்கள்  இருவரும்  அங்கிருந்தவர்களால்  மீட்கப்பட்டு  தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படடுள்ளது.

இந்நிலையில், 22 வயதுடைய போலந்து யுவதி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply