சுமார் 1.2 மில்லியன் பெறுமதியான ஐஸ் ஐஸ்போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

சுமார் 1.2 மில்லியன் பெறுமதியான 60 கிராம்  ஐஸ்போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் சொகுசு வாகனத்தில் பயணித்த போதே தெஹிவளை கவுடானை பகுதியில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் போது, ​​38 வயதான அவர் தற்போது டுபாயில் தலைமறைவாக உள்ள படோவிட்ட ராஜித என்றழைக்கப்படும் “லோகு” என்பவரின் போதைப்பொருள் கும்பலை நடத்துவதாகத் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களைத் தாக்கியமை தொடர்பில் நீதிமன்றங்களால் இதற்கு முன்னர் பல பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply