உலக சிறுவர்தினத்தை முன்னிட்டு மிருகக்காட்சிசாலையில் இலவச அனுமதி!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு,  அக்டோபர் 1ஆம் திகதி அன்று, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவினை  இலவசமாகப் பார்வையிடலாம் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில், காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அன்றைய நிகழ்வுகள் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான குழந்தைகளின் மனப்பான்மை மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply