முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் – புலனாய்வு பிரிவினருக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இன்று திங்கட்கிழமை பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தனது பதவி விலகலை அறிவித்திருந்தார். எனினும் கடந்த 23 ஆம் திகதியே தனது பதவி விலகல் கடிதத்தை அவர் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில், நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply