ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பிற்குள் நுழைய தடை!

துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பில் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோட்டை பொலிஸ் நிலையம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்ம தேரர், துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின், தம்மிக்க முனசிங்க, தென்னே ஞானானந்த தேரர் உள்ளிட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply