இன்று ரயில் தாமதம் ஏற்படுமென ரயில்வே திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

தாக்குதல் சம்பவமொன்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்  விதமாக தொழிற்சங்கம் மேற்கொண்ட  நடவடிக்கைகளினால்  இன்று மாளிகாவத்தை புகையிரத வீதியில் இருந்து புறப்படும் புகையிரதங்கள் சில தாமதங்களை சந்திக்க நேரிடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் பணிபுரியும் சக ஊழியர் ஒருவருக்கும், ஏனைய ஊழியர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து,  ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மாளிகாவத்தை ரயில் முற்றத்திற்குச் செல்ல மறுத்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த சம்பவம் தொடர்பில் புகையிரத அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply