சரவணராஜாவின் பதவி விலகல் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள நீதிச்சேவை ஆணைக்குழு

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்காக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணங்கள் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்ற செயல்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை களைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதிச் சேவை ஆணைக்குழு பிரதம நீதியரசரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழி தொடர்பிலான வழக்கில் உத்தரவுகளை பிறப்பித்திருந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தாம் வகித்த அனைத்து நீதிசேவை பணிகளில் இருந்தும் பதவி விலகுவதாக நீதிசேவை ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்ததுடன், அவர் நாட்டைவிட்டும் வெளியேறியிருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply