குழந்தைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர்  தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை இந்த நாட்களில் குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படுவதாக மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போது பெய்து வரும் மழையுடன், சில பகுதிகளில் குளிர் காலநிலையிலும், வேறு சில பகுதிகள் வெள்ளத்தினாலும்  பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதன் விளைவாக பல நோய்கள் வேகமாக பரவுவதை அவதானித்து வருவதாகவும்  குறிப்பாக, குழந்தைகளில் ஆஸ்துமா கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குளிர் வெப்பநிலை காரணமாக வைரஸ் சுவாச தொற்றுகள் அதிகரித்துள்ளதாகவும்வைத்திய நிபுணர்  பெரேரா மேலும் தெரிவித்தார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சுத்தமான தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காவிட்டால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆஸ்துமா உள்ள பிள்ளைகள் உரிய சிகிச்சைகளை முறையாகப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply