தல்துவையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் கைது!

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த மாதம் இருவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை கட்டுவெவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதுடைய இளைஞரிடம் 6 கிராம் ஹெராயின் போதைப்பொருளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர், குறித்த சந்தேகநபர் பிரபல கும்பல் மன்னா ரமேஷின் குவை சேர்ந்தவர்  என்று கூறப்படுகிறது.

கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதியின் பிற்பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதுடன் ஏனைய இருவர் படுகாயமடைந்தனர்.

இதேவேளை, கொலையாளிகள் துப்பாக்கிச் சூட்டிற்கு T-56 தாக்குதல் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளதுடன் உடனடியாக குற்றம் நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக  கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் காயமடைந்த நால்வரும் அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்களில் 27 வயதான மற்றும் 36 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply