ஜின் கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டது!

ஜின் கங்கைப் படுகையில் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் நீக்கியுள்ளது.

இதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான மழைவீழ்ச்சி இல்லாததால், தவலம மற்றும் பத்தேகம நீர்மட்ட கண்காணிப்பு நிலையங்களிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி ஜின் கங்கைப் பகுதிக்கு முதலில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நில்வலா ஆற்றுப் பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply