நிறைவேற்று அதிகார முறைமை நீக்கம் தொடர்பில் விஜயதாஸ ராஜபக்ஷ!

இலங்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று சபையில் எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தையே தாம் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது முற்றிலும் பொய்யான ஒரு விடயம் எனவும், தமக்கு அப்படி செய்ய வேண்டிய தேவையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

தாம் செய்ய முடியுமான செயற்பாடுகளை மட்டும்தான் செய்வோம் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply