நாடாளுமன்றில் அமைதியின்மை – இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்றில் ஏற்பட்ட அமையின்மை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவரின் உரையைத் தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டமையால் 10 நிமிடங்களுக்கு சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

10 நிமிடங்களின் பின்னர் அமர்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது நாடாளுமன்ற செங்கோலை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவை நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து 4 வாரங்கள் இடைநிறுத்தியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply