இந்திய கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்!

இந்திய கடற்பரப்பில் ஊடுருவி கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மன்னாரைச் சேர்ந்த 8 மீனவர்களை இந்திய கரையோர காவல்படையினர் கைது செய்து படகுகளுடன் மண்டபம் கரையோர காவல்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்திய எல்லைக்குள் இந்திய படகு ஒன்றில் இருந்து இலங்கைப் படகுகள் நான்கிற்கு கடத்தல் பொருட்களை மாற்றிக்கொண்டிருந்த சமயமே இந்தியக் கரையோரக் காவல்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று தமிழகம் மண்டபம் பகுதியில் வைத்து இராமேஸ்வரம் கடலோர குழும பொலிசாரான மரைன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மன்னார் மீனவர்கள் 8 பேருடன் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply