புறக்கோட்டை ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து – காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இரண்டாம் இணைப்பு

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவிலுள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 6 பேருக்கு கடும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply