பாட இடைவேளையில் கையில் கறுப்புப்பட்டியுடன் களமிறங்கிய ஆசிரியர்கள்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தொழில் சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மூதூர் -பட்டித்திடல் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் , இன்று பாட இடைவேளைப் பகுதியில் பாடசாலைக்கு முன்னால் கையில் கறுப்புப் பட்டிகளை அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது, கொழும்பிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர் சங்கத்தினர் மேற்கொண்ட தொழில் சங்க போராட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் ஆசிரியர்களிடம் செயற்பட்ட விதத்தை கண்டித்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply