மீண்டும் ஆரம்பமாகிறது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ சமுகமளிக்க முடியாதமையால் அகழ்வுப்பணிகள் பிற்போடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுத்தொகை பணம் வழங்குவது தொடர்பாக பேசப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இன்றையதினம் இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவுமாவட்ட செயலக கணக்காளரும் பிரசன்னமாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply