கனேமுல்ல சஞ்சீவ கும்பலில் இருந்த துப்பாக்கிதாரி ஒருவர் கைது !

பிரபல பாதாள உலக பிரமுகரான கணேமுல்ல சஞ்சீவவுக்கு துப்பாக்கி ஏந்தியதாக கூறப்படும் அவரது நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ரொஷான் சத்துஷ்க, கடவுசீட்டு இன்றி துபாயில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துனுமலே சரத் மற்றும் கெஹெல்பத்தர பத்மே ஆகியோரின் தந்தை கொலையுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply