யாழ்.பல்கலையில் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைவு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply