லிட்ரோ எரிவாயு விலை மேலும் அதிகரிப்பு!

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 3,565 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் 5 கிலோ சிலிண்டர் 1,431 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை 2.3கிலோ சிலிண்டர் 668 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்ட விலையேற்றமே இந்த நடவடிக்கைக்கு காரணம் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்று தெரிவித்தார்.

இந்த வருடத்தில் கடந்த மாதங்களில், லிட்ரோ கேஸ் நான்கு தடவைகள் விலையை அதிகரித்த அதேவேளை ஐந்து தடவைகளில் விலைகளை குறைத்துள்ளது.

மேலும் மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விலை திருத்தம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply