கொழும்பில் இன்று 10 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகளே நீர் வெட்டுக்கு காரணம் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply