யாழில் தனியார் விடுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையைச்  சேர்ந்த லால் பெரேரா வயது 61 என்பவரே சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். 

அவர் கடந்த 3 நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார்  எனவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply