யாழில் திறந்து வைக்கப்படவுள்ள “சுகதேகம் ஆதுலர்சாலை”!

யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவம் ஊடான சுகதேகம் ஆதுலர்சாலை மருத்துவ சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த மருத்துவ சேவைக்கான மருத்துவ நிலைய திப்பு விழா நாளை 11.11.2023 இடம்பெறவுள்ளது.

திறப்பு விழா நிகழ்வுகள் நாவற்குழியில் அமைந்துள்ள நெய்தல் கடற்கரை நகரில் நாளை காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மருத்துவர் நித்தி கனகரட்ணம் கலந்து கொள்ளவுள்ளதோடு, சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண நீதவான் நீதமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜா கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும் யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரி மனோஸ்குமார், வடக்கு மாகாண சுகாதார, சுதேசமருத்துவ,நன்னடத்தை சிறுவர் பராமிரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் சிவகுருநாதன் திருவாகரன் மற்றும் யாழ்.பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும் சிவபூமி அறக்கடளை நிதியத்தின் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திறப்பு விழா நிகழ்விற்கு அனைவரையும் வருகைதருமாறு இயற்கை நலவாழ்வு சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply