நல்லூர் வீதிக்கு பூட்டு!

கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செட்டப்பட்டுள்ளதாக யாழ், மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் மாலை 5 மணி முதல் 06 மணி வரையிலான ஒரு மணி நேரமும் , சனிக்கிழமை சூரன் போர் அன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 06 மணி வரையிலும் வீதி தடை போடப்பட்டு , போக்குவரத்து செய்யப்படவுள்ளது.

எனவே குறித்த வீதியால் பயணிப்போர் மாற்று வீதி ஊடாக தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply