மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி!

கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் ஏற்பட்ட மண்சரிவில் 4 கடைகள் சேதமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடை ஒன்றில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு அவரது சடலத்தை மீட்க பொலிஸாரும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

உயிரிழந்தவர் பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதே இடத்தில் இதற்கு முன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடைக்காரர்களை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. எனினும், அவர்கள் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் பல பாதிப்புக்குள்ளான கடைகள் அண்மித்த பகுதியில் அமைந்துள்ளதாகவும், ஆக்கிரமித்துள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply