வடமராட்சி – நெல்லியடி மாலிசந்திப் பகுதியில் மாவீரர்களின் பெயர்ப் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாவீரர் நினைவு மாதிரி மண்டபத்தில் மக்கள் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நினைவு மண்டபத்தில் மாவீரர் வார இறுதி நாளான நவம்பர் 27 வரை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. (01)
