ஐ எம் எப் கடனின் இரண்டாவது தவணை டிசம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணை டிசம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கலாநிதி வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply