ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துடன் இடம்பெறவுள்ள முக்கிய கலந்துரையாடல்!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அதிகாரிகள் சபையுடன் அமுல்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த புதிய நிர்வாக சபையும் தீர்க்கமான காரணியாக இருப்பதால் எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பெரும் பொறுப்பு இந்த அதிகாரி சபைக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இன்றைய கலந்துரையாடல் தேர்தல் முக்கிய கலந்துரையாடலாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி கூறியுள்ள போதிலும், தேர்தலை நடத்தும் நேரம் தொடர்பில் குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply