மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் 2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள்!

2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், 2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2024 மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply