அக்கரைப்பற்றில் விசேட தேவை உடையவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக, அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் அ.லே. பைசாத் அவர்களின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விஷேட தேவையுடைய மற்றும் நீண்ட காலமாக பாரிய நோய்களுக்கு ஆளானவர்களுக்கான உபகரணங்கள் பிரதேச செயலாளர் ரீ.எம்.முஹம்மட் அன்சார் நழிமி அவர்களின் தலைமையில் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

இதில் உதவி பிரதேச செயலாளர் ராஷித் யஹ்யா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறூக் மற்றும் சமூக சேவைப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் வாழும் விசேட தேவை உடைய மற்றும் கணவனை இழந்தவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply