வவுனியாவில் கண்டெடுக்கப்பட்ட தம்பதியரின் சடலங்கள்!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள கடையொன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வயோதிப தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடையின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான அறையொன்றில் 78வயதுடைய ஆண் மற்றும் 68வயதுடைய பெண் ஆகிய இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சடலங்களை கண்டெடுத்த, உயிரிழந்த தம்பதியினரின் மகன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை அவர்களுக்கு சொந்தமான சுமார் 5 பவுண் தங்கம் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply