யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கிய இந்திய உயரஸ்தானிகர்!

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே 480 பேருக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply