ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!

திருகோணமலை கிண்ணியா பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து அரச பேருந்து ஒன்றில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வருவதாக திருகோணமலை பிரிவின் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாலம் போட்டாறு பொலிஸ் சோதனை சாவடியில் குறித்த சந்தேக நபரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 11 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய கிண்ணியா குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply