மாணவியிடம் மோசமாக நடந்துகொண்ட பாடசாலை வான் சாரதி!

எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பாடசாலை வான் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை பாலியல் வன்புணர்விற்கு குறித்த சாரதி ஆளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி நேற்றைய தினம் பாடசாலைக்கு வராமல் சீருடையில் எம்பிலிப்பிட்டிய நகரில் இருப்பதை நண்பிகள் கண்டதாக பாடசாலைக்கு கிடைத்த தகவலின் படி சிறுமியின் உறவினர்கள் அம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி சிறுமி பாடசாலைக்கு சென்ற வானின் சாரதியை வரவழைத்து பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, சிறுமி புத்தகங்கள் வாங்கவுள்ளதாக தெரிவித்து எம்பிலிப்பிட்டிய நகரில் வானில் இருந்து இறங்கியதாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவரது வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த சிறுமியின் உறவினர்கள், சிறுமியை கண்டுபிடிக்கும் வரை சாரதியை விடுவிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த போதிலும், பொலிஸார் அவரை விடுவித்துள்ளனர்.

இதனையடுத்து, மதியம் வீட்டிற்கு வந்த சிறுமி, எம்பிலிபிட்டியவில் இருந்து சில புத்தகங்களை வாங்கிய பின்னர், சாரதி தன்னை வானில் ஏற்றி சந்திரிகா ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக கூறினார்.

மேலும், பொலிஸாரிடம் இருந்து அழைப்பு வந்ததையடுத்து, அவர் தன்னை அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

குறித்த வானை பொலிஸார் கைப்பற்றிய போதிலும், சந்தேக நபரான சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply