மண் சரிவு காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடை!

நேற்று மாலை ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால், மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ஹாலி-எல மற்றும் உடுவர ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் தாமதமாகிவருகின்றன.

மலையகப் பாதையில் தடைப்பட்ட செயற்பாடுகளை மீளமைப்பதற்காக தண்டவாளங்களை அகற்றும் முயற்சியில் புகையிரத ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply