பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கைது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம்  குறித்த மாணவனை காவல்துறையினர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, யாழ் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்யும் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட போதைப் பொருள் சிறிய சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply