சிறைச்சாலை நெரிசலை குறைக்க புதிய தீர்வு!

சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்ட முன்வரைவை தயாரிப்பதற்கு நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னதாக, சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சந்தேக நபர்கள் மற்றும் வழக்குகளின் குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதற்கு தகுந்த பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.

இதன்படி, மேற்படி அதிகாரிகள் குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் சட்ட வரைவைத் தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply