நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வளிமண்டல இடையூறு காரணமாக, நாளை முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களும் மழையினால் பாதிக்கப்படலாம்.

குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply