இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13 இலட்சத்து 34 ஆயிரத்து 345 உல்லாசப் பயணிகள் பல்வேறு நாடுகளிலுமிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இம்மாதத்தின் கடந்த 10 தினங்களில் 57 ஆயிரத்து 394 உல்லாசப் பிரயாணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலான உல்லாசப்பயணிகள் இந்தியாவிலிருந்தே வந்துள்ளனர். அங்கிருந்து 11, 442 பேர் நாட்டுக்கு வந்துள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து 8,004, பிரிட்டனிலிருந்து 5,991, ஜெர்மனியிலிருந்து 5,336, சீனாவிலிருந்து 2,894 பேரும் கடந்த 10 தினங்களில் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply