யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பிலும், டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அதிகாரிகளால் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply