24 மணித்தியாலங்களுக்குள் 2000 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில், மொத்தம் 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 133 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் 12 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ள 116 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாகவும் தெரிவித்தார்.

இதனடிப்படையில், 2 கிலோ 232 கிராம் ஹெரோயின், 178 கிலோ கஞ்சா, 769 கிராம் ஐஸ் போதைப்பொருள், 35 கிலோ, 626 கிராம் மாவா, 30,550 கஞ்சா செடிகள் மற்றும் 3,489 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply