வர்த்தகரின் வீடு உடைக்கப்பட்டு 7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு!

உடப்புவ, புனவிட்டியவில் உள்ள பிரபல தேங்காய் மற்றும் இறால் பண்ணை வியாபாரி ஒருவரின் இல்லத்தில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு குடும்பத்துடன் நள்ளிரவில் தேவாலய பூஜையில் கலந்து கொண்ட தொழிலதிபர், வீடு திரும்பியபோது, தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டார்.

குறித்த திருடப்பட்ட பொருட்கள் 7 மில்லியன் ரூபா பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் வீட்டின் யன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply