ஒன்பது வளைவு பாலம் அருகே ரயிலில் மோதி இளம் பெண் உயிரிழப்பு!

எல்ல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஒன்பது வளைவு பாலத்திற்கு அருகில் 21 வயதுடைய பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் கித்தலெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் அவர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply