களுத்துறை சிறைச்சாலையில் தாக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மொல்காவ கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய சுனில் எனும் கைதியே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை  நாகொட களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நோயாளர் விடுதி எண் 5ல் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகர் களுத்துறை-வடக்கு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை-வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply