யாழில் தீவிபத்து! இரண்டு கடைகளுக்கு சேதம்!

யாழ்ப்பாண நகர்பகுதியின் பெரிய கடை வீதியில் உள்ள இரண்டு கடைகளில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீவிபத்தில் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன.

இதேவேளை,சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply