கடந்த 24 மணித்தியாலங்களில் 1,400 க்கும் அதிகமானோர் கைது!

இன்று நண்பகல் 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர தேடுதல் நடவடிக்கைகளின் போது 1,400 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 447 கிராம் ஹெரோயின், 827 கிராம் ஐஸ், 5.35 கிலோ கஞ்சா மற்றும் 3,574 போதை மாத்திரைகள் என மொத்தம் 1,422 சந்தேக நபர்கள் யுக்தியா என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 3 சந்தேக நபர்களிடம் நிதிச் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 37 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகத்தின் பேரில் 35 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply