கம்பஹாவில் பதிவான கொரோனா மரணம்!

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா என தெரியவந்துள்ளது.

யக்கல பிரதேசத்தில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் போது , ​​அவர் கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ஷ தெரிவித்தார்.

கம்பஹா மாநகரசபைக்குட்பட்ட கஸகஹவத்தை சுடுகாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயிரிழந்தவரின் சடலத்தை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் கண்டி மஹரோஹல பிரதேசத்திலும் கொரோனா தொற்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply