பெறுமதி சேர் வரியின் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்பட உள்ள மாற்றம்!

எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் பெறுமதி சேர் வரியின் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்பட உள்ள மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக ஜனவரி முதல் பெறுமதி சேர் வரி 18 %அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எரிபொருளுக்கான வரி 18 சதவீதத்திலிருந்து குறைந்து 10.5% மட்டுமே விதிக்கப்படவுள்ளது.

மேலும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு 2.5% நீக்கப்பட்ட நிலையில் எரிவாயுக்கான பெறுமதி சேர் வரி விகிதம் 15.5% ஆக விதிக்கப்படவுள்ளது.

எனவே ,ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 380.00 ரூபாய்க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 468.00 ரூபாய்க்கும், டீசல் 361.00 ரூபாய்க்கும், சூப்பர் டீசல் 477.00 ரூபாய்க்கும், விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply