ஆறு வயதுச் சிறுமியை தாக்கிய தந்தை!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை கைப்பேசியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 27ஆம் திகதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த தந்தை சிறுமியின் தலையில் கைப்பேசியால் தாக்கியுள்ளார்.

இது குறித்து அருகிலுள்ளவர்கள், கிராம சேவகர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் குறித்த வீட்டிற்கு வந்த உத்தியோகத்தர்கள் தாயாரிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாய், தந்தை இருவரையும் சங்கானை பிரதேச செயலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

குறித்த நபர் தினமும் குடித்துவிட்டு வந்து பிள்ளைகள் மீது தாக்குதல் நடாத்துவதாகவும், தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply